#BREAKING: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டருக்கு 4 நாள் சிபிஐ காவல்!

Default Image

ஆடிட்டர் பாஸ்கர ராமனை 4 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி.

சென்னையில் கைது செய்யப்பட்டன காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் நேற்று சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். வேதாந்த நிறுவனத்திற்கு சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 250க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக பாஸ்கர ராமன் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்கள் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. இதன்பின், சென்னையில் கைது செய்யப்பட்ட ஆடிட்டர் பாஸ்கர்ராமனை டெல்லி அழைத்து செல்ல சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், ஆடிட்டர் பாஸ்கரராமனை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்