#BREAKING: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

Default Image

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சோலையாரில் 4, ஓசூர், கிருஷ்ணகிரியில் தலா 2 செ.மீ மழை பதிவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 7, 8-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்