#BREAKING: அரசின் அனுமதி பெற்ற குவாரிகள் செயலபட அனுமதி – உயர்நீதிமன்றம்
அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி.
நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. கல், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்ற கனிம பொருட்களை எடுத்து செல்ல எந்த தடையும் இல்லை என்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக ரூ.300 கோடி அபராதம் விதித்த உத்தரவை மறுபரிசீலினை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிகளை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து நோட்டீஸ் தரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.