#BREAKING: பொங்கலுக்கு முன் 50000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு – அமைச்சர் அறிவிப்பு

Default Image

இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.

சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொங்கலுக்கு முன் 50000 விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 15,866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன் மின் இணைப்புகள் முழுமையாக வழங்கப்பட்டு விடும் என்றும் ஒன்றரை ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு நிறைவு பெற போகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்பின் பேசிய அமைச்சர், இதுவரை தமிழ்நாட்டில் 1.2 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 2.67 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்