#BREAKING: கருமுட்டை விற்பனை விவகாரம் – ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன்!

Default Image

சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கு சம்மன்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 5 மருத்துவமனைகளில் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே, சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இரு தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் இரு மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஈரோடு, பெருந்துறை, சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் மற்றும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டது அம்பலமானதை தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை அளித்த பின், வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கோவை சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார்.  இதனிடையே, 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்