திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 1) முதல் 12ம் தேதி வரை தீவிரம் குறைந்து காணப்படும். தற்பொழுது, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் கேரளாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து NDRF விரைந்துள்ளது. இந்நிலையில், மழை தொடர்பான […]
கொச்சி : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, கனமழை எச்சரிக்கை காரணமாக 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெள்ளப்பெருக்கு, பயண இடையூறுகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக மாநிலம் முழுவதும் […]
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும். இது செப்டம்பர் 17 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முழுமையாக விலகும். கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 […]
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள முதல்வர் பினராயிவிஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இந்த துறைமுகத்தால், சர்வதேச வர்த்தகம் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழிஞ்சம் துறைமுகத்தின் கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். பெரிய சரக்குக் கப்பல்கள் கொழும்புவில் நிறுத்துவதற்குப் பதிலாக இந்தியக் கடற்கரைக்கே வருவதை உறுதிசெய்யும் வகையில் […]
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை பிரிவினரை அனுப்பினர். முதலமைச்சர் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததால், மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை இரு இடங்களிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நேற்றைய தினம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு […]
கேரளா : சமீபத்தில் ஹிட்டான ‘ஆலப்புழா ஜிம்கானா’, ‘தள்ளுமாலா’ படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளனர். கொச்சியில் நடைபெற்ற சோதனையில், 1.6 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது, மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கேரள கலால் துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவு நடத்திய சோதனையில், பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்தனர். புதிய திரைப்படம் […]
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது, ரஜினிகாந்த் கேரளாவில் இருக்கிறார். அங்கு படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அட்டப்பாடியில் தனது காரில் இருந்து ரசிகர்களை வாழ்த்தும் ஒரு சமீபத்திய வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அங்கு கூடிய ரசிகர்கள், ‘தலைவா.. தெய்வமே’ என கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். இதில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல்தான் படுவைரலாகி […]
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த அந்த இளைஞர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்து, பாலத்தின் உயரமான பகுதியில் நின்று மிரட்டல் விடுத்தார். இந்த தகவல் உடனடியாக பொன்னானி மற்றும் மாறாடு காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த இடத்திற்கு […]
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறுகிறார் எனக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும், ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆளும் திமுக அரசு வரவேற்பு தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பு […]
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ”எம்புரான்” படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது. நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் இணைந்து நடித்த ‘L2: எம்புரான்’ படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. படத்தில் சில காட்சிகளுக்காக ஒரு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தாலும், அதையும் கடந்து […]
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால், மழலையின் இந்த அப்பாவி கோரிக்கை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. அங்கன்வாடியில் பேசிய அந்த குழந்தையின் வீடியோ அம்மாநில அரசின் கண் முன்பே சென்றடைந்துள்ளது. அட ஆமாங்க… கேரள மாநில சுகாதாரம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் […]
கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த ஆண்புலி கடித்து கொன்றது. இதையடுத்து, அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், மானந்தவாடி நகராட்சியின் சில பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, புலியை சுட்டுப் பிடிக்க மாநில வனத்துறை முடிவு செய்து தேடிவந்த நிலையில், நேற்று காலை தேடுதல் குழுவினரை புலி தாக்கிய […]
கேரளா : மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த கிரீஷ்மா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை காதலித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த 2022-ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவிக்க காதலித்து வந்த ஷாரோன் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே, ஷாரோன் ராஜை தீர்த்து காட்டினாள் தான் நம் […]
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம, நாளை மறுநாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல், ஜனவரி 16 காணும் பொங்கல் ஆகிய தினங்கள் மட்டுமின்றி ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அளித்து ஒருவார காலம் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தைப் போல, அண்டை மாநில எல்லையோர பகுதிகளிலும் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அங்கும் உள்ளூர் விடுமுறை விடுவது […]
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம் மத்திய போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் வயநாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்ணுரில் செம்மனூர் நகைக்கடை திறப்பு விழாவில் ஆபாச கருத்துகள் தெரிவித்ததாக பாபி செம்மனூர் மீது, நடிகை ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார். ஏற்கனவே, தனது பேஸ்புக் […]
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாவேலிக்கரையில் இருந்து கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை […]
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐயப்பபக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அதிக கூட்ட நெரிசல், வாகன நெரிசலை அடுத்து சாலை மார்க்க வழித்தடங்கள் பல்வேறு சமயங்களில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்த கூட்ட நெரிசலை குறைக்க அங்கு மாற்று வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து வேண்டும் […]
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி தலைமையில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கின்னஸ் சாதனைக்காக சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை காண கேரள அமைச்சர் சஜி செரியன், திருக்காட்கரை காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் ஆகிய முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான மேடையானது சுமார் […]
கேரளா : மாநிலத்தின் இன்று காலை குருமாத்தூரில் உள்ள சின்மயி பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்ற நிலையில், பிரேக் செயலிழந்த காரணத்தால் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த போது பேருந்தில் 20 மாணவர்கள் பேருந்தில் இருந்துள்ளனர். அதில் 18 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெத்யா எஸ் ராஜேஷ் என்கிற மாணவன் மட்டும் இந்த விபத்து சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் கவிழ்ந்ததில் ஜன்னல் வழியே விழுந்து பஸ்சின் […]
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 91. மறைவு : மாரடைப்பு உள்ளிட்ட உடலநலக்கோளாறு காரணமாக கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வாசுதேவன் நாயர் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று (டிசம்பர் 25) சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி […]