#BREAKING: ஓபிஎஸ்-க்கு கொரோனா அறிகுறி – மருத்துவமனை அறிக்கை!

Default Image

லேசான கொரோனா தொற்று அறிகுறி காரணமாக ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி என மருத்துவமனை அறிக்கை.

ஓ.பன்னீர்செல்வம் காய்ச்சல் காரணமாக இன்று காலை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓபிஎஸ்-க்கு கொரோனா தொற்று இல்லை என்றும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.  தனக்கும் சில அறிகுறிகள் இருப்பதாகவும் இரண்டு நாட்களாக லேசான மயக்கம் உடல் வலி காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகவும் மருத்துவர்களிடம் ஓபிஎஸ் தெரிவித்தாக கூறப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், லேசான அறிகுறிகளுடன் ஓபிஎஸ் தனி வார்டில் சிகிச்சை பெறுகிறார். தற்போது ஓபிஎஸ்-யின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்