#BREAKING: இங்கு நாளை முதல் சினிமா படப்பிடிப்புக்கு தடை – தோட்டக்கலைத்துறை

Default Image

நீலகிரில் உள்ள சுற்றுலா தளங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு நடத்த தடை விதிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்புகள் நடத்த தடை விதித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. கோடை சீசனை ஒட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

கோடை சீசன் முடிந்ததும் ஜூலை 1 முதல் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் நீலகிரி மாவட்டம் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னுர் சிம்ஸ் பூங்கா பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்