#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு – ஜன.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Default Image

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜனவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை ஜனவரி 4-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை ஜனவரி 4-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனிடையே, அதிமுக பெயரையோ, சின்னத்தையோ ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்