மத்திய அரசின் மானியத்தை பெற இயலாத அதிமுக அரசு – சி.ஏ.ஜி அறிக்கை மூலம் அம்பலம்!

Default Image

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை மூலம் அம்பலம். 

ஒரு அரசின் நிதி செலவினங்கள், கடன், லாபம் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் இழப்பு எவ்வளவு என்று சிஏஜி அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படும். மத்திய அரசின் செலவினங்கள் குறித்து சிஏஜி அறிக்கை வெளியிடப்படும். அதேபோல்  மாநில அரசுகளின் செலவினங்கள் குறித்து சிஏஜி அறிக்கை வெளியாகும்.

மாநில அரசுகளின் சிஏஜி அறிக்கையை நிதி அமைச்சர் பொதுவாக சட்டசபையில் வெளியிடுவது வழக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த 5 வருடமாக தமிழகத்தின் சிஏஜி அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் விரைவில் விளியிடப்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் 5 வருட சிஏஜி அறிக்கை வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில் வருவாய் மற்றும் பொருளாதாரப்பிரிவு குறித்த 2018 – 2019 மார்ச் வரையிலான சி.ஏ.ஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த அதிமுக ஆட்சியில் காலதாமதம் உள்ளிட்ட அலட்சிய நடவடிக்கைகளால், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு பெற்று தரவேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது என அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கால தாமதத்தால், மத்திய அரசின் மானியம் ரூ.16.26 கோடி விடுவிக்கப்படவில்லை. ரயில்வே பால பணிகள் நிறைவு அறிக்கை அளிப்பதில் கால தாமதம் ரூ.120 கோடி நிலுவை தொகை பெறப்படவில்லை. தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதியை உரிய வகையில் பயன்படுத்தத்தால் ரூ.11.52 கோடி மானியத்தை பெற முடியவில்லை.

அரசின் ஒழுங்கு முறைகளை செயல்படுத்தாததால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.71.22 லட்சம் சேவை கட்டணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அங்கீகாரம் பெறுவதில் கால தாமதம் என்றும் இதனால் ரூ.9.1 கோடி மானியத்தை பெற இயலவில்லை என சிஏஜி அறிக்கை மூலம் கடந்த அதிமுக ஆட்சியின் நிலை அம்பலமாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth
geetha jeevan About Magalir Urimai thogai