விஷச்சாராய விவகாரம்.. விசாரணை எப்போது முடியும்.? வெளியான முக்கிய தகவல்.!

One-man commission member Justice Gokul Das

கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. இன்னும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை உலுக்கிய இந்த விஷச்சாராய சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, விஷச்சாராயம் தயாரிப்பு, விற்பனை, அதன் பாதிப்புகள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நேற்று நியமித்து இருந்தது. இந்த ஒருநபர் ஆணையம் நேற்று முதல் தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணையை தீவிரபடுத்தியுள்ள விசாரணை அதிகாரி கோகுல்தாஸ் இன்று செய்தியாளர்களிடம் முக்கிய தகவலை குறிப்பிட்டார். அவர் பேசுகையில், தற்போது விசாரணை நிலை குறித்து எந்த விவரமும் கூற முடியாது என கூறினார். இறுதியாக விசாரணை முடிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசு முறையாக அறிவிக்கும் என கூறினார்.

அப்போது விசாரணை ஆணைய அறிக்கை சமர்ப்பிக்க காலஅவகாசம் வழங்ப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என விசாரணை ஆணைய தலைவர் கோகுல்தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்