சென்னை ஐஐடியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..!

Default Image

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளனர். அப்பொழுது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஐந்து பேருக்கு தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 60 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஐஐடி வளாகத்தில் உள்ள அனைவரும் மருத்துவத்துறை செயலாளரின் அறிவுரையை கேட்டு முகக்கவசம் அணிய தொடங்கி உள்ளதால், தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்