புயல் கரையை கடக்க மேலும் 4 மணிநேரம் – இந்திய வானிலை தகவல்.!

Default Image

நிவர் புயல் கரையை கடக்க மேலும் 4 மணிநேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி வடக்கே பலத்த சூறைக்காற்றுடன் மையப்பகுதியை கடந்து வருகிறது. புதுச்சேரி 20 கி.மீ.., சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் புயலானது கரையை கடந்து வருகிறது. புயல் கரையை கடந்து வருவதால் கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், புயல் கரையை கடக்க மேலும் 3 முதல் 4 மணிநேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரம் தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது. புயல் கரையை கடக்கும் எதிர்திசையில் காற்று வீசுவதால், நிவர் புயல் முழுவதும் கரையை கடக்க தாமதம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்