டெல்லி ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த ரயில்வே நிலையத்தில் இயந்திர மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டால் இலவசமாக டிக்கெட் என்ற முறை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
unknown nodeஇந்நிலையில், பயணிகளிடையே உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் தற்போது டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு சிறுவர் அந்த இயந்திரத்தின் முன்பு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் ரயில்வே துறை பதிவிட்டுள்ளது. அதில் நீங்கள் 180 வினாடிகளில் 30 முறைup-downசெய்தால், இலவச பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள் என ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.