ஆன்லைன் சூதாட்டத்தின் உச்சக்கட்டம்.! தன்னையே பணயமாக வைத்து விளையாடி பெண்.!

Default Image

உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் ஆன்லைன் லூடோ விளையாட்டில் பணத்தை அதிகமாக இழந்து தன்னையே பணயமாக வைத்து விளையாடி தொற்றுள்ளர். 

உத்திர பிரதேசம் நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் ரேணு என்கிற பெண் ஆன்லைன் விளையாட்டான லுடோ விளையாடி அதற்கு அடிமையாகி பணத்தை வைத்து விளையாடி வந்துள்ளார். அவரது கணவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதிகமாக பணத்தை இழந்த ரேணு ஒரு கட்டத்தில் எல்லை மீறி தன்னையே பணயமாக வித்து விளையாடியுள்ளார் . அதில் தோற்றதன் காரணமாக அவர் தற்போது காணாமல் போயுள்ளார். இதனை அவரே தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஷயம் அறிந்து பதறிப்போன ரேணுவின் கணவர், தன் மனைவியை மீட்டுத்தர கோரி பிரதாப்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரேணு மற்றும் அவரது கணவருக்கு 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்