பங்களாதேஷில் மின்னல் தாக்கி இரண்டு கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு.!

Default Image

கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு.

பங்களாதேஷில் கடந்த வியாழக்கிழமை மின்னல் தாக்கி இரண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் முகமது நாடிம் மற்றும் மிசானூர் ரஹ்மான் ஆவர். இவர்கள் இருவரும் டாக்கா நகரின் அருகில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் மழை காரணமாக அவர்களின் கிரிக்கெட் பயிற்சி நிறுத்தப்பட்டது. இதனால், அவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கி இருவரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பங்களாதேஷில் பருவமழையில் மின்னல் காரணமாக பலர் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இந்த ஆண்டு பங்களாதேஷில் மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350-க்கும் கீழ் குறைந்துள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan