டெல்லியில் கடும் பனிப்பொழிவால் ரயில், விமான சேவை ரத்து….!!

Default Image

டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான மற்றும் ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படுவதால், வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடைபயணம் செல்பவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.சாலைகளில் வசித்து வருபவர்களும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.இதனிடையே, கடுமையான பனிமூட்டத்தால், டெல்லியில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்