புகையிலை பொருட்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

Default Image

அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸானது, நாளுக்குநாள் மிகவும் வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையையும் அதிகரித்த தான் உள்ளது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில அரசுகளும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அவர் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிகரெட் அல்லாத புகையிலைப் பொருட்களை மெல்லும் பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதால் கொரோனா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்கள் சூவிங்கம், புகையிலை பொருட்களை மென்று பொது இடங்களில் எச்சில் துப்புவதை, ஏற்கெனவே தடை செய்துள்ளதாகவும், மேலும், புகைபிடிப்பதும் சுவாச நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh