மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் தட்டிக்கேட்ட சகோதரனை கொலை செய்த நபர் ..!

Default Image

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மோகித் என்பவர் தனது சகோதரன் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒன்றாக வசித்த காலங்களில் மோகித்தின் சகோதரன் புபேந்திராவுக்கு மோகித்தின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மோகித்தின் மனைவி புபேந்திரா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததை கணவனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து இனி வீட்டிற்கு வரவேண்டாம் என மோகித் கூறியுள்ளார். இருந்தாலும் புபேந்திரா தொடர்ந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வீட்டிற்கு வந்த புபேந்திராவை மோகித் கடுமையாக திட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் புபேந்திரா மோகித்தை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அப்பொழுது மோகித்தின் மனைவி வீட்டின் மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்