5000 ரூபாய் பணம்.? 2 சிறுவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்த கொடூரன்.! 

Badaun double murder

Badaun double murder : உத்தரப் பிரதேச மாநிலம் படவுனில் சலூன் கடை வைத்து இருக்கும் முகமது சாஜித், நேற்று (செவ்வாய்) இரவு 8 மணியளவில், தனது பக்கத்து வீட்டுக்காரர் வினோத் தாக்கூர் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மகன்கள் 13 வயதான ஆயுஷ், 6 வயதான அஹான் என இரு சிறுவர்களையும் கூரான ஆயுதத்தால் வெட்டியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் இரு சிறுவர்களும் துடிதுடித்து உயிரிழந்தனர். Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு … Read more

பாஜக ஆளும் மாநிலங்களில் தான் போதைப்பொருள் நடமாட்டம்… அமைச்சர் ரகுபதி விளக்கம்.

Minister Ragupathy

Minister Ragupathy – தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு நடவடிகக்கைகள் குறித்தும் இன்னும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் இன்று நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், தமிழகத்தில், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 2019ஆம் ஆண்டு 11,418 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2020இல் 15,144 கிலோ கஞ்சா, 2021இல் 20,431 கிலோ கஞ்சா, 2022இல் 28,381 கிலோ கஞ்சா, 2023இல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் … Read more

பரபரக்கும் உ.பி தேர்தல்.! எதிர்க்கட்சி கொறடா ‘திடீர்’ ராஜினாமா.!

Samajwadi Party Manoj Pandey

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். … Read more

ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள்.. தொல்லியல் துறையின் முக்கிய தகவல்கள்….

UP Varanasi Gyanvapi Masjid

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயமும், அதன் அருகே ஞானவாபி மசூதியும் உள்ளது. இந்த ஞானவாபி மசூதியானது இந்து கோயில் இருந்த இடம் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஞானவாபி மசூதி சுற்று சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அந்த சிலைக்கு பூஜை செய்ய மசூதி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் … Read more

ராமர் கோயில் அழைப்பு.. காங்கிரஸ் கட்சிக்கு வைத்த பொறி.! – கேரள முஸ்லீம் அமைப்பு.!

Ram Temple Ayodhya - Rahul gandhi - Sonia gandhi

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் 2024 ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா (Pran Pratishtha) நடைபெற உள்ளது.  இதற்கான முழு ஏற்பாடையும் ராமர் கோயிலை கட்டி முடித்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனும் அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. அதன் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா பல்வேறு அரசியல் தலைவர்ளுக்கு ராமர் கோயில், பிரான் பிரதிஷ்டாவுக்கான அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சி … Read more

உ.பி-யில் கொடூரம்.. வீடியோ எடுத்து மிரட்டி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.!

Women Gang rape in Agra UP

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. தகவல் அறிந்து சென்ற ஆக்ரா போலீசார் அந்த பெண்ணை மீட்டு ஒரு பெண் உட்பட 4 ஆண்கள் என 5 பேரை கைது செய்தனர். சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை நள்ளிரவு ஆக்ராவில் உள்ள காவல்நிலையத்திற்கு ஒருவர் போன் செய்து , ஆக்ராவில் உள்ள பணக்கார தங்கும் விடுதியில் ஒரு பெண் … Read more

சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்து! 6 பேர் பலி…27 பேர் காயம்!

Bus - Accident

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர்-குஷிநகர் நெடுஞ்சாலையில் ஜகதீஷ்பூர் அருகே, நின்று கொண்டிருந்த பேருந்து பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை ஐந்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றி சென்று கோரக்பூர்  மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக … Read more

#By-Election Result: இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு!

5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும்  பின்னடைவு. குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, குஜராத்தில் பாஜக 152 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முன்னிலை விவரங்களை பார்த்தால் கிட்டத்தட்ட குஜராத்தை தனது கோட்டையாகவே பாஜக மாற்றியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. அங்கு … Read more

பாலியல் வன்கொடுமை.! தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்ட பட்டியலின சிறுமி.!

உ.பியில் பரோலி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் அப்பகுதியில் இனிப்பு கடை நடத்தி வரும் ஒப்பந்த மின்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தற்போது உத்திர பிரதேசத்தில் நடந்த சம்பவம் மனதை பதறவைக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பட்டியலின சிறுமி ஒருவர் உத்திரபிரதேச மாநிலம், பரோலி அருகே, தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தை மீட்டு … Read more

ஞானவாபி மசூதி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! விரைவில் விசாரணை….

ஞானவாபி மசூதி  வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று தான் என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  உத்திர பிரதேச மாநில வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலைய பகுதியில் இருக்கும் ஞானவாபி மசூதி சுவரில் இந்து கடவுள் படங்கள் இருக்கிறது. அதற்கு பூஜைகள் செய்ய அனுமதிக்க வேண்டும் என 5 பெண்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்று … Read more