50ஆக உயர்ந்த பீகார் கள்ளச்சாராய உயிரிழப்பு.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

Default Image

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. 

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரையில் இந்த கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து இருந்தது.

இந்நிலையில் இன்று இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது  50ஆக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரிக்க பீகார் போலீசார் சிறப்பு குழுவை நியமித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோத மது விற்பனை அண்மை காலமாக அதிகரித்து வருவதாகவும், அதுவும் கிராமங்களில் இந்த கள்ளச்சாராய புழக்கம் அதிகமாக இருக்கிறது எனவும் தகவல்கள் வெளிவருகின்றன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்