மாபெரும் வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நன்றி.!

Default Image
  • டெல்லி சட்டசபை தேர்தலில் பெருபான்மையை நிரூபித்து 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி நன்றி தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லிக்கே கிடைத்த வெற்றி இது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல கல்வியை விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் புதுமையான அரசியலுக்கு இந்த வெற்றி வழி வகுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது. இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

இதில் பாஜக 7 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மியின் வெற்றியை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதில் 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி நன்றி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்