ஹரியானாவில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ்.!

Default Image

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பின்னர் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லுரிகள் உள்ளிட்ட அனைத்தையும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லுகளில் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்து வருவதால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியவில்லை. 

இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் இறுதித் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். இதையடுத்து 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு நடத்தப்படவில்லை, எனவே மற்ற பாடங்களில் பெறப்பட்ட சராசரி மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் 11 ஆம் வகுப்புக்கு உயர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே உத்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் 1 முதல் 9 வரை உள்ள மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் என அறிவித்துள்ளனர். மேலும் சி.பி.எஸ்.இயில் பயிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆல்-பாஸ் என்றும்  அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்