உத்தரபிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்து ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு.!

Default Image

உத்தரபிரதேசத்தின் பல பகுதியில் பாம்பு கடித்து ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு.!

உத்தரபிரதேசத்தின் பல மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பாம்பு கடித்து 6 பலியாகியுள்ளார்கள். அந்த வகையில், உத்தரபிரதேசத்தின் பண்டாவின் கிர்வான் நகரில், 27 வயது இளைஞரும் அவரது மனைவியும் பாம்புக் கடியால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்ததாக மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் வினீத் சச்சன் தெரிவித்தார்.

மேலும், சம்கரா கிராமத்தில் ஒரு விவசாயியும், சிங்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணும் வயல்களில் வேலை செய்யும் போது பாம்பு கடித்து அவர்களும் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதே போல், சித்ரகூட் மாவட்டத்திலும், கார்வி கோட்வாலி பகுதியிலும் 40 வயதுக்கு மேற்பட்ட இருவர் பாம்பால் கடித்த பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்