பரபரப்பு … மருத்துவனையில் இருந்து தப்பியோடிய கொரோனா அறிகுறி நபர்..!

Default Image

 இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்த நபரூக்கு தீவிர காய்ச்சல் உள்பட கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

பின்னர் அவரை வென்லாக் மருத்துவமனையின் தனி வார்டில் வைத்து தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.இந்நிலையில் நேற்றிரவு தனக்கு வைரஸ் தொற்று எதுவும் இல்லை என்று கூறி  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்வேன் என கூறிய அந்நபர் பின்னர் காணாமல் போகிவிட்டார்.

இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை இன்று மங்களூரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.இதையெடுத்து போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்