ரபேல் போர் விமான வழக்கு: புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது மத்திய அரசு

Default Image

ரபேல் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு.

முதலில் ரபேல் ஒப்பந்தத்தை முன்னெடுத்தது  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு தான்.

அதன் பின்னர ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடி 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .

Image result for rafale congress vs bjp

மேலும் 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர்.அவர்  முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் இருந்தே காங்கிரஸ் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.

நரேந்திர மோடியின் அரசு ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் நாடாளுமன்ற நிலைக்குழு, டெண்டர், தொழில்நுட்பக் குழு, மதிப்பீடு, பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டதாகவும்  காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம் தான் இரகசியம்  காக்கபடவேண்டும்.அதன் விலை அல்ல என குற்றம் சாட்டியது.

இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அப்போதைய பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா ஆலந்து ரிலையன்ஸ் தான் கூட்டணியில்  இருக்க வேண்டும் என்று இந்திய அரசு வற்புறுத்தியதால் எங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை கூறியது மேலும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில், பல ஊழல்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில்  உச்ச நீதிமன்றம் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்தம்  ஆகிய அனைத்தும் சரியான முறையில் தான் இருக்கிறது என தீர்ப்பு வழங்கியது. மேலும் அது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

மறு சீராய்வு :

Related image

தொடர்ந்து மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யபட்டது.இந்நிலையியல் ரபேல் சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு.மேலும்  36 ரபேல் விமானம் வாங்கிய ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.2018 டிசம்பர் 14-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியே என்றும் மீடியாக்களில் வெளியான பகுதி தகவல்களை அடிப்படையாக கொண்டு மட்டும் மறு ஆய்வு செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்