பலாத்கார புகாரளிக்க சென்று சிறுமியை பலாத்காரம் செய்த காவல் நிலைய அதிகாரி கைது …!

Default Image

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சைல்டு லைன் குழுவிடம் தெரிவித்திருந்ததையடுத்து காவல் நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட்டுள்ளதாகவும், அவரை சஸ்பெண்டு செய்ய  உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

குற்றம் சாட்டப்பட்ட காவல் நிலைய அதிகாரி தப்பி ஓடியதுடன், தனது  மொபைல் போனையும் மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறியுள்ள ஏடிஜிபி பிரகாஷ் அவர்கள், கான்போர் அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் குழுவாக சேர்ந்து அந்த நபரை தேடியுள்ளனர்.

அவரது நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்த பின் அவர் பிரயாக்ராஜ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், அவரிடம் பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
MS Dhoni - CSK vs RCB Match
Myanmar Earthquake - Indian govt relief
CSK Team IPL 2025
TVK leader Vijay - BJP State president Annamalai
Chennai Super Kings vs Royal Challengers Bengaluru
myanmar earthquake