ராமஜெயம் கொலை வழக்கில் ஆஜரான பிரபாகரன் வெட்டிக்கொலை.. 4 பேர் கைது!

ramajeyam murder case

திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (தொழிலாலதிபர்),  கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டார். அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை  தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும் … Read more

புத்தாண்டு நெருங்குவதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் போலீசார்..!

இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு நெருங்கி வருவதையடுத்து சென்னையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை முழுவதும் போலீசார் விடிய விடிய வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் 115 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட  கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக … Read more

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி கைது..!

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரதீபக்கை கைது செய்த சிபிஐ.  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்த போது, வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது கணவர் தீபக் கோச்சர் பயன்பெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி இது தொடர்பாக கடந்த மே மாதம் 2018 ஆம் ஆண்டு விசாரணையை … Read more

போலீசார் நடத்திய அதிரடி வேட்டை..! 3 நாட்களில் 403 கஞ்சா வியாபாரிகள் கைது!

தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  முதல் கஞ்சா வேட்டை நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மேலும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை … Read more

10-ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது..!

மதுரையில் போலி மருத்துவம் பார்த்த பெண் கைது. மதுரை மாவட்டம் ஸ்ரீராம் நகரில் யோக சரஸ்வதி என்பவர் பத்தாம் வகுப்பு தான் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அப்பகுதியில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் பத்தாம் வகுப்பு தான் படித்துள்ளார் என்பதும், போலி மருத்துவம் பார்த்ததும் உறுதியானது. இதனை எடுத்து அவரை போலீசார் … Read more

நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற நபர்கள் மீது அதிரடி நடவடிக்கை..!

நியாயவிலை கடைகளில் வாங்கும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்ற 191 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் செயலில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்கள் மீது உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை … Read more

டெல்லியில் தொடரும் கொடூர கொலைகள்…! ஷ்ரத்தா பாணியில் மேலும் ஒரு கொலை சம்பவம்..!

கணவனின் தவறான நடக்கை காரணமாக கணவனை துண்டு, துண்டாக வெட்டிய தாய் மற்றும் மகன் கைது.  டெல்லியில், லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா – அப்தாப், அப்தாப் திருமண செய்ய வற்புறுத்திய நிலையில், ஷ்ரத்தா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்தாப் அவரை 35 துண்டுகளாக வெட்டி, குளிசாதன பெட்டியில் வைத்திருந்து, பின் டெல்லியில் பல பகுதிகளில் ஒவ்வொரு துண்டாக வீசியுள்ளார். இது தொடர்பான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

தமிழக மீனவர்களுக்கு வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை – பருத்தித்துறை நீதிமன்றம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை நேற்று எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை வழங்கி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபோதையில் கல்லூரிக்குள் நுழைந்து இளைஞர்கள் ரகளை..! 6 பேர் கைது…!

மதுரையில் கல்லூரியில் போதையில் தகராறு செய்த இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர்.  நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி அரசு கலைக்கல்லூரி சாலையில் இளைஞர்கள் சிலர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் ஒலி எழுப்பியவாறு அதிவேகத்தில் சென்றுள்ளனர்.  மேலும், ஆபாச வார்த்தைகளால் கூச்சலிட்டபடி சென்றுள்ளனர். இளைஞர்களின் செயல் அங்கிருந்த மாணவிகளை அச்சத்தில் ஆழ்த்திய நிலையில்,  இதனை பார்த்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை கல்லூரி அருகே ஏன் இப்படி செய்கிறீர்கள் மாணவிகள் பயப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த … Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவனை மீண்டும் தமிழகம் அனுப்ப முயற்சி..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவனை மீண்டும் தமிழகம் அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்.  நேற்று முன்தினம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த இரண்டு இழுவை படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த 15 மீனவர்களும் 14 வயது சிறுவனும் உள்ள நிலையில், அந்த அசிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த சிறுவனை இந்திய அனுப்பி வைக்க … Read more