சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 பேரை கைது செய்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் […]
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து வரும் 4 ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகி இருக்கும் தகவல் தான் பேரதிர்ச்சியாக எழுந்துள்ளது. அந்த மாணவி மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த போது அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பள்ளி முடிந்த பிறகு மாலை வீட்டிற்கு சென்ற […]
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், ஒரு படகில் கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 10 பேரை கைது செய்ததோடு, படகையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றது. கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை […]
இலங்கை: முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன், யோஷித ராஜபக்ச அரசாங்கத்திற்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்களுடன் தொடர்புடைய பொருளாதார மோசடி வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் சொத்துக் குவிப்பு புகாரில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் யோஷித மீது குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன்னதாக வழக்குப்பதிவு செய்திருந்தது. அதனை தொடர்ந்து அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையையும் நடத்தியது. ஜனவரி 3 அன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) சுமார் இரண்டு […]
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பது மட்டுமல்லாமல், படகுகளை பறிமுதல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தொடர் கதையாகி வரும் இந்த விவாகரத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமன்னாருக்கு வடக்காக உள்ள நெடுந்தீவு கடற்பரப்பில், மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை அதுத்துமீறி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரம் […]
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தனியார் பள்ளி வளாகத்தில் சிறுமி லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைய, அவர் உள்ளே விழுந்து உயிரிழந்தார். இதனை அடுத்து, பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் தனது குழந்தை உயிரிழந்தது எனக் கூறி குழந்தையின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், தனியார் […]
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது அங்கு போலீசார் தரக்குறைவாக பேசியதாக, அதனை வீடியோ பதிவு செய்து வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. எனவே, பெற்றோர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, சிபிஐ (Central Bureau of Investigation) மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, வெளிமாநில ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு […]
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு சென்ற எல்கேஜி மாணவி லியோ லட்சுமி (3), திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதனை அடுத்து, பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் தனது குழந்தை உயிரிழந்தது எனக் கூறி குழந்தையின் தந்தை பழனிவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் செயிண்ட் மேரீஸ் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 3 […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது பெண் குழந்தை நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். மதிய இடைவெளி சமயத்தில் கழிவறை சென்ற குழந்தை, அங்கிருந்த செப்டிக் டேங்க் மீது எறியதாக கூறப்படுகிறது. அந்த செப்டிக் டேங்க் இரும்பு மூடி துருப்பிடித்து இருந்துள்ளதால், சிறுமி லியா லட்சுமி தவறி செப்டிக் டேங்க் உள்ளே விழுந்துவிட்டார். இதனை அடுத்து சில நேரம் கழித்து லியாவை […]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் இன்று காலை கைது செய்யப்பட்டு சென்னை பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டார். விடுதலைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தேவையற்ற ஒடுக்கு முறையாக எனது […]
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. அவர்களது 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்தத காரணத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட […]
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. அவர்களது 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக […]
ஆந்திரா : திருப்பதியில் திவ்யா என்கிற பெண் 2 லட்சம் மதிப்புள்ள நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். டாமி என்கிற இந்த நாய் டிசம்பர் 10-ஆம் தேதி இருவரை பார்த்து குறைத்த நிலையில், அந்த நாயை இரண்டு பேர் முதலில் கல்லை வைத்து எறிந்துள்ளனர். இருப்பினும் நாய் குறைத்ததை நிறுத்தவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இருவரும் நாயை கத்தியால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் திவ்யா திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் நடந்த […]
சென்னை: சென்னை பெரம்பூரில் ரவுடி அறிவழகனை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடியை சேர்ந்த ஏ பிரிவு ரவுடியான அறிவழகனை பிடிப்பதற்காக பனந்தோப்பு சென்ற போலீசாரை, அவர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக அவரை காலில் சுட்டு காவல் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் டித்துள்ளார். இன்று அதிகாலையில் பொது இடத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு பேசும் சமூகத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கஸ்தூரி சங்கரை ஹைதராபாத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி, ஹைதராபாத்தில் படத் தயாரிப்பாளர் வீட்டில் மறைந்திருந்தாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு […]
ராமேஸ்வரம் : நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அத்துடன் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தற்போது, சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு (நவ.,10) 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று 12 பேர் சிறைபிடிப்பால் தமிழக […]
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு உதவிய 2 நண்பர்கள், மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்ட 13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை […]
சென்னை : மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 27ஆம் தேதி சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்று அங்கிருந்த்து கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்த உள்ளதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சென்னை கிளாம்பாக்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர் பெயர் பைசல் ரகுமான் என்பதும், அவரிடம் […]
பாகிஸ்தான் : கராச்சியில் சிந்து மாகாணத்தில் உணவு தேடி வயலில் அத்துமீறி நுழைந்த ஒட்டகத்தின் காலை வெட்டிய கொடூரமான சம்பவத்தில் வயலின் உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. கடந்த வார இறுதியில் சங்கர் மாவட்டத்தின் முண்ட் ஜம்ராவ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சங்கர் மாவட்டத்தின் முண்ட் ஜம்ராவ் கிராமத்தில் உள்ள ஒரு வயலுக்கு பசியோடு ஒட்டகம் ஒன்று வந்து அங்கு இருந்த உணவுகளை சாப்பிட்டதாக […]
உத்தரபிரதேசம் : நொய்டா சாலையில் நண்பருடைய பிறந்த நாளை இளைஞர்கள் கூட்டமாக அரை நிர்வாணத்துடன் ஆட்டம் போட்டு கொண்டாடிய நிலையில், போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சாலையில் நின்று கொண்டு சட்டையை கழட்டி கையில் மதுபாட்டிலுடன் ஆட்டம் போட்டு அந்த இளைஞர்கள் தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். இரவு நேரம் என்று கூட பார்க்காமல் நடு சாலையில் தாங்கள் வந்த கார்களை நிறுத்திவிட்டு அதில் பாடல்களை போட்டு கொண்டு அதிகமாக சத்தம் எழுப்பினர். பொலிரோ காரின் […]