மவுத்வாஷ் கொரோனாவை கொல்லுமா.? இந்திய நிபுணர்கள மறுப்பு.!

Default Image

மவுத்வாஷ் கொரோனா வைரஸைக் கொல்லும் என்று இந்திய நிபுணர்கள் இல்லையென்று நம்புகிறார்கள்.

எளிதாக கிடைக்கும் மவுத்வாஷ்கள் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கொல்லக்கூடும் என்று கூறும் ஆய்வுகள் குறித்து இந்தியாவில் சுகாதார வல்லுநர்கள்  சந்தேகம் எழுப்புகிறார்கள். அதாவது, மருத்துவ அமைப்புகளில் இதனை நிரூபித்தால் மக்கள் கொரோனா வைரஸை தடுக்க மவுத்வாஷ் உபயோகிக்கக்கூடாதா..? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

எந்தவொரு ஆய்வும் இறுதி முடிவை உறுதிப்படுத்தும் வரை குறிப்பிடப்படக்கூடாது. ஆராய்ச்சியாளர்கள் இறுதி அறிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் வரை முடிவுகளை உறுதிப்படுத்த முடியாது என்கின்றனர்.

அண்மையில், இங்கிலாந்தில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில்,  சில மவுத்வாஷ்கள் உமிழ்நீரில் உள்ள கொரோனா வைரஸைக் கொல்ல உதவும் என்று கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸ் ஒருவரை மூக்கு வழியாகவும், வாயைத் தவிர கண்கள் மூலமாகவும் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.இந்நிலையில், கொரோனவை தடுப்பதற்கான கோட்பாட்டளவில் வாய் கழுவுவது சந்தேகத்திற்குரியதாக தோன்றுகிறது என்று சில இந்திய நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

மேலும் சிலர், “வாயில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களைக் குறைக்க உதவுவதால் மவுத்வாஷைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம், ஆனால் கொரோனா வைரஸைக் கொல்வது தொடர்பான இறுதி சான்றுகள் இன்னும் காத்திருக்கின்றன என்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்