4வது திருமணத்திற்கு தடையாவா? இருக்க பார்வையில்லாத மகனை- கொன்ற கொடூர தாய்!

Default Image

நான்காவது திருமணத்திற்கு தடையாக இருந்த தன் மகனை குளத்தில் மூழ்கடித்து தாய் கொலை செய்தார்.

பிகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தர்மசீலா தேவி (வயது 23) இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அருண் என்பவரை திருமணம் செய்தார்.இந்த தம்பதிகளுக்கு பார்வையற்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் திருமணமாகிய ஒரே வருடத்தில் கணவரைப் பிரிந்து வேறொரு நபரை திருமணம் செய்தார் தேவி. 2வது திருமணம் செய்த அவர் திடீரென்று உயிரிழந்ததால் தேவி  மகேஷ் செளதிரி என்பவரை 3வதாக மணந்தார். ஆனால் அவரும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

இதை அடுத்து, நான்காவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்த  தேவி, தனது 4 வயது மகனை அருகில் உள்ள குளத்தில் மூழ்கடித்து அந்த பார்வையில்லாத பிஞ்சை நெஞ்சில் கொஞ்சமும் கருணையின்றி கொலை செய்து உள்ளார்.

இந்நிலையில் முதல் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தேவியை கைது செய்து விசாரித்ததில், குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதாக  காவல் அதிகாரி அமரேந்திர குமார்  தகவல் தெரிவித்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்