விடுதி உணவில் பல்லி! 30 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு

Default Image

30க்கும் மேற்பட்ட தெலுங்கானா மாணவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர், உணவில் பல்லி இறந்ததுக் கிடந்ததாகக் குற்றம் சாட்டபட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் அரசு நடத்தும் பெண்கள் விடுதி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உணவில் இறந்த பல்லியைப் பார்த்ததாக மாணவி ஒருவர் கூறியதாகவும், ஆனால் அது பச்சை மிளகாய் என்று கேட்டரிங் ஊழியர்கள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்