பள்ளிகள், கல்லூரிகள் ஜூலை-31 வரையில் திறக்க தடை.! மத்திய அரசு அதிரடி.!

Default Image

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது – மத்திய அரசு.

கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவிலை என்றும்இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளது.

இருந்தாலும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள்
பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே பணிபுரியலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்