பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்து 3 லட்சம் கோடி ருபாய் மதிப்புள்ள செல்வங்களை கொள்ளையடித்துவிட்டனர்! மத்திய அமைச்சர் தகவல்!

Default Image

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசுகையில், பிரிட்டிஷ்காரர்கள் பற்றி குறிப்பிட்டார். முக்கியமாக பதினெட்டாம் நூற்றாண்டில் மத்தியில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து பல கோடி ருபாய் மதிப்பிலான செல்வத்தினை கொள்லையடித்ததாக குறிப்பிட்டார்
இதனால் இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியா அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தின் மதிப்பு இன்றைய மதிப்பில் இந்திய ரூபாயில், 3,197 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என ஒரு பொருளாதார ஆய்வு குறிப்பிடுவதாகும் கூறினார்.
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரவிசங்கர் அங்கு பேசுகையில், ஈரான், ரஷ்ய, அமெரிக்கா என பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசியுள்ளார். மேலும், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்