ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – பிரதமர் மோடி உரை.!

Default Image

இந்தியா முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்  பிரதமர் மோடி அவர்கள்  இன்று ‘மன் கி பாத்’  என்ற மனதின் குரல் என்னும் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக உரையாற்றினார்.  அப்போது கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் நமக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை என மோடி தெரிவித்துள்ளார். 

கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும் உங்களில் பலருக்கு என் மீது கோபமும் இருக்கலாம் என தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள் என்று குறிப்பிட்டார். சட்டத்தை, உத்தரவுகளை மீறுவது பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோடி எச்சரித்துள்ளார். தொடர்ந்து பேசிய மோடி, மத்திய அரசின் நடவடிக்கையால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. லாக்டவுன் என்பது நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்கிற நடவடிக்கை. நீங்கள் இந்த பொறுமையை இன்னும் பல நாட்களுக்கு வெளிப்படுத்த நேரிடலாம். கொரோனாவில் இருந்து பாதுகாக்க லாக்டவுன் தான் வழி என்றும் இதனை சிலர் புரிந்து கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார். பின்னர் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நிச்சயம் நாம் வெல்வோம். லாக்டவுன் என்பது கடுமையான முடிவாக இருந்தாலும் நமக்கு வேறு வழியே இல்லாமல் இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் லாக்டவுனை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்