ரெடியா இருங்க…இன்று முதல் இவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் – மத்திய அரசு!

Default Image

தனியார் தடுப்பூசி மையங்கள்,அதிகபட்சமாக ரூ.150 வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்.

இந்தியாவில் கொரோனா பூஸ்டர் டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த நிலையில்,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.மேலும்,பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.அதன்படி, 2 தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே,பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.தனியார் தடுப்பூசி மையங்கள், அதிகபட்சமாக ரூ.150 வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் 2 ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தி, 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்