மக்களவையில் 'தேர்தல் சீர்திருத்த மசோதா' இன்று தாக்கல்!

Union Minister Kiran Rijiju today introduced the 'Election Reform Bill' in the Lok Sabha.

மக்களவையில் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ இன்று அறிமுகம் செய்கிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்தது வரும் நிலையில், தேர்தல் ஆணையம் 4 வகையான தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.

அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சட்ட திருத்த மசோதா வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்னோடு இணைப்பதற்கு வழிவகை செய்கிறது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும். பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் வாக்களிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.

இந்த நிலையில், மக்களவையில் ‘தேர்தல் சீர்திருத்த மசோதா’ இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இன்று அறிமுகம் செய்யவுள்ளார், அதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆபத்தான தேர்தல் சீர்திருத்த மசோதாவை அனைவரும் எதிர்க்க வேண்டும் சில அரசியல் தலைவர்கள் கூர் வரும் நிலையில், இன்று தாக்கலாகிறது.