” மோடி தான் பிரதமர் ” அப்பா ஆதரவு , மகன் எதிர்ப்பு…எதிர்கட்சிகளுக்கு ஆப்பு……!!

Default Image
மக்களவையின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெற்றது.அதுவும் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி மக்களவை கூட்டம் இதுவாகும்.இதையடுத்து இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த M.P_க்களும் கலந்து கொண்டனர்.மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவருக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தங்களின் நன்றியுரையை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் பல பிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் ஆனால் எங்கள் இதயத்தில் இருக்கும் பிரதமர் நீங்கள் தான் நீங்கள் தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று மக்களவையில் பேசினார். முலாயம் சிங் யாதவ்_வின் இந்த பேச்சு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநிலத்தில்  மாயாவதி கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்.மேலும் பாரதீய ஜனதா கட்சியை தோற்கடிப்போம் என்றும் அவர் கூறிவருகின்றார்.இந்நிலையில் முலாயம் சிங் யாதவ்_வின் இந்த பேச்சு எதிர்கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்