#BREAKING: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதால் 7 தமிழர்கள் கைது!

Default Image

சித்துர் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறை.

ஆந்திர மாநிலம் சித்துரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மர கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டு, 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரம் வெட்டியதாக தமிழகத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்த ஆந்திர காவல்துறையினர், 3 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். சித்துர் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக அம்மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாகன சோதனையின்போது 3 வாகனங்களில் செம்மரம் கட்டைகள் இருப்பது தெரிவந்துள்ளது. இதன்பின் செம்மரக் கட்டைகள், 3 வாகனங்களை பறிமுதல் செய்து, இதில் ஈடுபட்ட 7 தமிழர்களை அம்மாநில காவல்துறை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்