அசாம் ஆற்றில் படகு விபத்து..!-70 பேரை காணவில்லை..!

Default Image

அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் 70 பேரை காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் ஜோராட் பகுதியில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் நேற்று மா கமலா என்ற எந்திர படகு புறப்பட தாயாராக இருந்த நிலையில், அவ்விடத்திற்கு மற்றொரு படகு வந்துள்ளது. இதனால் வரும் படகிற்கு இடம் அளிக்க மா கமலா படகு சற்று நகர்ந்துள்ளது. மா கமலா படகில் 120 பயணிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில் படகு நகர்ந்த போது எதிரே வந்த படகின் மீது மோதியுள்ளது.

இதில் மா கமலா படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதன் காரணத்தால் அதில் இருந்த 120 பயணிகளும் ஆற்றில் மூழ்கியுள்ளனர். இதில் சிலர் நீச்சல் அடித்து கரையேறியுள்ளனர். மேலும், பலர் நீரில் மூழ்கியதை தொடர்ந்து அவ்விடத்திற்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர் விரைந்து மீட்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று மீட்பு பணியில் ராணுவமும் இணைய உள்ளது. இந்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 3 பேர் காயமடைந்துள்ளனர். 42 பேர் இந்த ஆற்றிலிருந்து மீட்கபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஆற்றில் மூழ்கியுள்ள 70 பேரை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
Minister Palanivel Thiyagarajan - BJP State president Annamalai
DMK MPs iniviting various state CMs
Jio - Starlink
hardik pandya virat kohli and rohit sharma
Malavika Mohanan sad
dharmendra pradhan Anbil Mahesh Poyyamozhi