கேரளாவில் படகு விபத்து: 4 மீனவர்கள் உயிரிழப்பு..!

Default Image

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தால் 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள கடற்பகுதியில் 5 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் படகில் மீன் பிடித்துள்ளனர். பின்னர் கரைக்கு மீனவர்கள் திரும்பியுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இந்த படகில் மொத்தமாக 16 மீனவர்கள் பயணித்து உள்ளனர். இந்த படகு விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மீதமுள்ள 12 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது, பெரிய அலையால் மீன்பிடி வலை படகில் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh