மதிய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு : ரத்ததானம் செய்வதற்கு மட்டும்

மத்திய அரசு ஊழியர்கள் ரத்ததானம் செய்ய சென்றால் அவர்களுக்கு அன்று ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கபடும் என மத்திய பணியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் ரத்ததானம் செய்ய சென்றால் அவர்களுக்கு அன்று ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கபடும் என மத்திய பணியாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.மத்திய பணியாளர் நல சங்கம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ரத்த தானம் அல்லது ரத்த கூறுகள் அதாவது, சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள் போன்றவற்றை தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க முடிவு செய்து உத்தரவு பிரபித்துள்ளது.அந்த உத்தரவு சில  விதிமுறைகளோடு விடுப்பு அளிக்க உள்ளது. அவை, அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தக் கூறுகளை தானம் அளிக்கும் நாளன்று (ஒருநாள்) மட்டும் ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். இந்த ரத்த தானம் ஆண்டுக்கு அதிகபட்சமாக 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள இயலும்.  தானம் அளித்ததற்கான தகுந்த ஆதாரங்களை இணைப்பது அவசியம்.source :www.dinasuvadu.com