ஆந்திராவில் அதிரடி.! வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை மசோதா நிறைவேற்றம்.!

Default Image
  • பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும்.
  • பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் சமீபத்தில்  பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரைக்கைது செய்து என்கவுண்டர் செய்தனர்.

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10-வது நாளில் குற்றவாளிகளை  என்கவுண்டர் செய்தது. பலரும் ஆதரவும் கொடுத்தனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். மேலும் தெலுங்கானா போலீசாரையும் பாராட்டினார்.

இதை தொடர்ந்து ஆந்திர சட்டசபையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி , பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவர்களை விசாரணை நடத்தி 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை கொடுக்க ஒரு புதிய சட்டம்  இயற்றப்படும் என கூறனார்.

பின்னர்  நடந்த ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தனர். இதை தொடர்ந்து இன்று ஆந்திர சட்டசபையில் ஆந்திர பிரதேச திஷா சட்டம் என பெயர் வைக்கப்பட்ட இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும். வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்