சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்து, ரூ.60 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Default Image

டெல்லி போலீசார், சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்து, ₹60 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பேரை கைது செய்தனர்.

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழன்(செப் 23) அன்று ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்து, குழுவின் இரண்டு முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

பீகாரின் முசாபர்பூரில் இருந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அபிஷேக் ராஜா மற்றும் நிஜாமுதீன் என தெரியவந்துள்ளது.

மேலும் குற்றவாளிகளிடமிருந்து 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் மற்றும் 10 கிலோகிராம் ஓபியம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்