வரும் திங்கள் அன்று நாடு முழுவதும், ஆவனி மாதம் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை கொண்டாட பக்தர்கள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் இதற்கான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
unknown nodeஇந்தியாவில் மும்பையில் விநாயகர் சதுர்த்தி வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். அங்கு லால்பாக்ஷா விநாயகர் மிகவும் பிரபலமானவர். அதேபோல ஹைதராபாத்தில் கைராபாத் விநாயகர் மிகவும் பிரபலமானவர். அங்கு செய்யப்படும் சிலை வருட வருடம் உயரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
unknown nodeஇந்த வருடம் விநாயகர் சிலையின் உயரம் 61 அடியாகும். இந்த விநாயகர் சிலையை 12 தலைகள், 24 கைகள் உடன் ஏழு குதிரைகள் கொண்ட பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இந்த விநாயகருக்கு சூரிய விநாயகர் என பெயரிட்டுள்ளனர். இச்சிலையை தயாரிக்க 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்கு மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். 50 டன் எடையுள்ள இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் வழிபாட்டிற்கு கொண்டுவரவுள்ளார்.