ஒருவழியாக ஆளுநரிடம் சென்ற திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் !

Default Image

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் குறித்து  மனு அளித்துள்ளனர்.

கேளிக்கை வரி ரத்து, உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதித்தல், அண்டை மாநிலங்களைப் போலவே பராமரிப்பு கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தங்கள் கோரிக்கைகளை விளக்கி, பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு பரிந்துரைக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்