அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழையானது பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது, தொடர் கனமழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

29 மாவட்டங்களில் மழை

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு (12 மணி வரை) நீலகிரி, கோவை, காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், அதேபோல், சென்னை, திருவள்ளூர், திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், தென்காசி, சிவகங்கை, மதுரை, பெரம்பலூர், திருச்சி, கரூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும் மழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இதற்கிடையில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும்.

இதனால், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்