அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை!

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடதமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த

Featured image

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடதமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் சென்னையில் கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு (1 மணி வரை) செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டைல, வெள்ளூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  எனவே, வெளியே செல்வோர், குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்.

12 மாவட்டங்களில் மழை

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது