இரவு வரை இந்த 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.!

rain

சென்னை: அடுத்த மூன்று நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்கிற மாட்ட வாரியான பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஏற்கெனவே, இன்று கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

26 மாவட்டங்களில் மழை

இந்த நிலையில், தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கோவை, கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 26 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்