குழந்தைகளை பற்றி பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விடயங்கள்.
குழந்தைகள் உள்ள வீட்டில், பெற்றோர்கள் எப்பொழுதுமே கவனமாக தான் இருப்பார்கள். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் தவழ தொடங்கி விடுவார்கள். அவர்களால் எல்லா பொருட்களையும் தங்களது கையில் எடுத்து விளையாட முடியும்.
unknown nodeகுழந்தைகளுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. அனைத்து பெறோர்களும் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக முதலுதவி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எனவே குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றி தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.
மலசிக்கல்
unknown nodeகுழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று மலசிக்கல். இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வு என்னவென்றால், பசலை கீரையை பொடிப்பொடியாக அறிந்து, வேக வைத்து சாதத்துடன் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
தேங்காய்ப்பால்
unknown nodeதேங்காய் பாலில், தாய்ப்பாலை விட அதிகமான சத்துக்கள் உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனவே வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வகையில், அக்குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாக செய்து கடித்து சாப்பிட கொடுக்க வேண்டும்.
கால்சியம்
வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்று. இது குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு சாப்ஃட் டிரிங்ஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
unknown nodeஏனென்றால், இத பானங்கள் கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ளும் திறனை குறைகிறது.
பால்
unknown nodeபால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு பாலில் தேன் சேர்த்து, கொடுத்து வந்தால், அவர்களது உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமைய உதவுகிறது.
புதினா இலைகள்
unknown nodeபெற்றோர்கள் அனைவருமே குழந்தைகளின் ஆரோக்கியமான உறக்கத்தை விரும்புபவர்கள். குழந்தைகள் தூங்கும் போது, கொசுக்கள் அல்லது ஈக்களின் தொல்லை இருந்தால், அவற்றை தவிர்ப்பதற்கு, அவர்கள் தூங்கும் இடத்தை சுற்றிலும், புதினா இலையை கசக்கி போட்டால் ஈக்கள் மற்றும் கொசுக்களின் தொல்லையை தவிர்க்கலாம்.
பேரிட்சை
unknown nodeகுழந்தைகளுக்கு இரவு தூங்குவதற்கு முன்பு 4 அல்லது 5 பரிட்சை பழங்களை சாப்பிட கொடுக்க வேண்டும். அவ்வாறு, கொடுத்தால் குழந்தைகளுக்கு மனோபலம் அதிகரிக்கும். மேலும், மூளை வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
சளி தொல்லை
இன்று குழந்தைகள் பாதிக்கப்படும் மிக முக்கியமான நோய்களில் ஒன்று சளி தொல்லை. இந்த பிரச்சனை இருக்கும் போது, குழந்தைகளுக்கு காது மற்றும் வயிற்று பகுதிகள் வலிக்கக் கூடும்.
unknown nodeஎனவே குழந்தைகளின் உடல் பாகங்களை தொடும் போது, அவர்கள் காட்டும் எதிர்ப்பை வைத்தே அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
நகம் வெட்டுதல்
குழந்தைகளுக்கு நகம் வெட்டுதல் என்பது மிகவும் பாதுகாப்பான முறையில் அவர்களை அணுக வேண்டும். அவர்கள் தூங்கும் போது தான் சில பெற்றோர்கள் நகம் வெட்டுகின்றனர்.
unknown nodeஆனால், எப்போதும் குழந்தைகளுக்கு நகம் வெட்டும் போது, அவர்களது கைகளை சோப்பினால் கழுவி விட்டு வெட்டும் போது, எளிதாக வெட்டலாம்.
வீடு சுத்தம்
unknown nodeகுழந்தைகள் உள்ள வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே சிறுகுழந்தைகளை அருகில் வைத்து கொண்டு, வீட்டை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு தும்மல், இருமல், சளி தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்பாடாகி கூடும்.